Showing posts with label tnpsc jobs. Show all posts
Showing posts with label tnpsc jobs. Show all posts

Tuesday, September 21, 2021

விஏஓ தேர்வுக்கு தயாரா? உங்களுக்கான சில முக்கிய குறிப்புகள்! | #TNPSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு; தேர்வர்களுக்கான முக்கிய தகவல்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கு தயாராகுபவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இப்போது பார்ப்போம். தமிழக இளைஞர்கள் பெரும்பாலானோரின் கனவு அரசு வேலை. அதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு இளைஞர்களிடையே கடும் போட்டி இருக்கும். ஆண்டுதோறும் TNPSC தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கு தேர்வர்கள் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. இதற்கான காரணம் இந்த தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி. கூடுதலாக, தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒரே ஒரு எழுத்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் உடனடி வேலை. மேலும் சொந்த மாவட்டத்திற்குள் வேலை கிடைக்க வாய்ப்பு. இந்த நிலையில் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான அறிவிப்பு, TNPSC வருடாந்திர அட்டவணைப்படி செப்டம்பர் மாதம் வெளியாக வேண்டும். ஆனால் தற்போது வரை அறிவிப்பு வெளியாகததால், அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், தேர்வு டிசம்பர் இறுதி வாரம் அல்லது ஜனவரியில் நடத்தப்படலாம் என தெரிகிறது. எனவே இந்த தேர்வு குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்போது பார்ப்போம்.

என்னென்ன பதவிகள்?

TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை,
1. இளநிலை உதவியாளர் (Junior Assistant)
2. தட்டச்சர் (Typist)
3.சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
4. கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer)
5. வரித் தண்டலர் (Bill Collector)
6. நில அளவர் (Field Surveyor) 7. வரைவாளர் (Draftsman)

கல்வித் தகுதி

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது. தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் தேர்ச்சி பெற்றவர்கள் அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். எனவே அவர்களுக்கு கூடுதலான வாய்ப்பு உள்ளது. வயதுத் தகுதி இத்தேர்விற்க்கான வயது தகுதி கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு. அதுவே இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு. மேலும் அனைத்து பதவிகளுக்கும் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அதாவது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை

இந்த பதவிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மொத்தம் 200 வினாக்கள் கொண்டது. அவற்றிற்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் (ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள்) கிடைக்கும். இத்தேர்வில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அவற்றில் 100 வினாக்கள் தமிழ் (அ) ஆங்கிலம் பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.

Friday, November 16, 2018

மீனவர்களுக்காக புதிய மொபைல் ஆண்ட்ராய்டு ஆப்

மீனவர்களுக்காக, 'THOONDIL' என்ற, புதிய மொபைல் ஆப் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் அறிமுக விழா, சென்னையில் நடந்தது. 

அமைச்சர் ஜெயகுமார், மீனவர்களுக்காக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வடிவமைக்கப்பட்ட, 'துாண்டில்' என்ற, புதிய மொபைல் ஆப் துவக்கப்பட்டு உள்ளது. 

இந்த, 'மொபைல் ஆப்'பில், மீன் கிடைக்கும் இடம், மழை, புயல் முன்னெச்சரிக்கை குறித்து தகவல் பெறலாம்.

மீனவர்கள் கரையிலிருந்து எப்போது புறப்பட்டனர் என்பதையும், அவர்கள் கடலில் உள்ள இடத்தையும் அறிய முடியும்.  டவர் இல்லாத இடத்தில், படகு இருந்தால், படகு உள்ள இடத்தை, ஜி.பி.எஸ்., கருவி வழியாகவே கண்டறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, November 14, 2018

ஜிசாட் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் (14-11-2018) அன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைக்கோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும்.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும்.  இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் இஸ்ரோ அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது. கனரக வகையை சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 10 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு தூக்கிச் செல்ல முடியும். ஜிசாட்-29 செயற்கைக்கோள் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்புத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய பெண் தேர்வு

அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின்போது இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.
நியோமி ராவ் தேர்வுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை வழங்க வேண்டும். அந்த சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், நியோமி ராவ் தேர்வுக்கு ஒப்புதல் கிடைப்பது உறுதி.
நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ள கோர்ட்டில் இந்தியரான சீனிவாசன் ஏற்கனவே நீதிபதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC மீண்டும் புதிய அறிவித்த காலிபணியிடங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Librarian பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Librarian


காலியிடங்கள்: 29


Librarian Grade-I in Industries and Commerce Department – 01


Librarian in Agriculture Department – 02


Film Librarian in Agriculture Department – 01


Librarian and Information Assistant Grade-I for Anna Centenary Library in Public Libraries Department – 05


Librarian and Information Assistant Grade-II for Anna Centenary Library in Public Libraries Department – 19


Librarian in Legislative Assembly Secretariat - 01


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் Library Science/Library and Information Science பிரிவில் இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:  30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/SCA/ST/MBC/DC/BC(OBCM)/BCM/ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.


விண்ணப்பக்கட்டணம்:


தேர்வு கட்டணம் ரூ.150ம்,  பதிவுக் கட்டணமாக  ரூ.150ம் செலுத்த வேண்டும். ஏற்கனவே, TNPSC-ல் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. 


தேர்ந்தெடுக்கும் முறை:


எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியானவர்கள் www.tnpsc.gov.inஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில்விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  14.12.2018


விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 18.12.2018


எழுத்துத்தேர்வு  நடைபெறும் தேதி:  23.02.2019


கூடுதல் தகவல்களுக்கு http://tnpsc.gov.in/notifications/2018_33_notyfn_Librarian.pdf


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 11.11.2018 தொகுதி-II தேர்வு நடைபெற்று அதற்கான விடைத்தாள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது இவற்றில் மாற்றம் இருந்தால் மறுபரிசீலனை செய்யலாம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஞாயிற்றுகிழமை (11.11.2018) தொகுதி-II க்கான தேர்வினை தமிழகம் முழுவதும் 116 மையங்களில் நடத்தியது.

மேற்படி தேர்வுக்கான தோராய விடைகள் வருகிற புதன் (14.11.2018) அன்று இணைய தளத்தில் வெளியிடப்படவுள்ளது.
இவ்வாறு வெளியிடப்படும் உத்தேச விடைகளில் தவறு இருப்பின் விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்திற்கு தெரிவித்து சரியான விடைகளை கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடமிருந்து இதுநாள் வரை எழுத்துப்பூர்வமாக கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு வந்தன.

அவ்வாறு பெறப்படும் கோரிக்கைகளை அட்டவணைப்படுத்தி, சீர்படுத்தி வினா எண் வாரியாக பிரித்து எடுத்து அதற்கான வலுச்சேர்க்கும் ஆவணங்களை நகலெடுத்து உரிய வல்லுநர் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப சுமார் இரண்டு மாத கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே அத்தேர்விற்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த கால தாமதத்தை குறைக்க தேர்வாணையம் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
புதிய முறை:
வினாத்தாள் தவறு குறித்த கோரிக்கைகள் இந்த தொகுதி-II  தேர்வு முதல் இணைய வழியில் மட்டுமே பெறப்படும். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே அத்தேர்வுக்குறிய தோராய விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும்.

தேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்திருந்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் தோராய விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும். 

விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண் ஆகிய இரண்டும் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலேயே இருக்கும்.

தேர்வர்கள் தேர்வு எழுதிய பாடத்தினை தேர்வு செய்து பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்-ஐ தெரிவு செய்தால் அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும்.

விடைக்குறிப்பில் விடைகளில் மாறுபட்ட கருத்து இருப்பின் அதன் கீழே தோன்றும் சரியான விடை / விடைகளை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் அதன் கீழே இருக்கும் குறிப்பு கலத்தில் உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும். அதனைத் தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர் பக்கம் எண் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

பின்னர், தேர்வர்கள் தெரிவித்த விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களை PDF கோப்புக்களாக பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது என்பதற்கான தகவல்களும் விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களும் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

பதிவேற்றம் செய்தபின் அதற்கான ஒப்புகையினை தேர்வர்கள் அச்சிட்டுக்கொள்ளலாம்.
• ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம்.

• கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்பட மாட்டாது.

• அஞ்சல் / மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது 

11.11.2018 அன்று நடந்த தொகுதி-II தேர்வுக்கான தோராயமான விடைக்குறிப்புகள் 14.11.2018 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விடைக்குறிப்புகளில் தவறு இருப்பின் அதற்கான கோரிக்கைகளை தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டும் வருகிற 20.11.2018 க்குள் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணைய பக்கத்தின் மூலம் மட்டும் அனுப்பலாம். 20.11.2018 க்கு பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
க. நந்தகுமார், இ.ஆ.ப.,
செயலாளர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு)