Saturday, December 8, 2018

உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவுக்கு 4வது இடம்

உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றுவது பற்றி குளோபல் கார்பன் புராஜெக்ட் என்ற பெயரிலான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில், 2017ம் வருடத்தில் சீனா (27 சதவீதம்), அமெரிக்கா (15 சதவீதம்), ஐரோப்பிய யூனியன் (10 சதவீதம்) மற்றும் இந்தியா (7 சதவீதம்) ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன.

இந்த ஆய்வில் முதல் 10 இடங்களில் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஈரான், சவூதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன என தெரிய வந்துள்ளது.  

Friday, December 7, 2018

வேகமாக வளரும் உலக நகரங்களின் பட்டியலில் திருப்பூர், திருச்சி

வேகமாக வளர்ந்து வரும் உலகின் டாப் 10 நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் திருப்பூர், திருச்சி, சென்னை ஆகியன இடம்பெற்றுள்ளன. 

ஆக்ஸ்போர்டு பல்கலை., பொருளாதார ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் உலக பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

2019 - 2023 ம் ஆண்டுகளில் வேகமாக வளரும் இந்திய நகரங்களின் டாப் 10 பட்டியலில் சூரத் முதல் இடத்திலும், ஆக்ரா 2வது இடத்திலும் உள்ளன. 

3வது இடத்தில் பெங்களூரு, 4வது இடத்தில் ஐதராபாத், 5வது இடத்தில் நாக்பூர், 6வது இடத்தில் திருப்பூர், 7 வது இடத்தில் ராஜ்கோட், 8 வது இடத்தில் திருச்சி, 9 வது இடத்தில் சென்னை, 10 வது இடத்தில் விஜயவாடா உள்ளது. 

உலக அளவில் ஆப்ரிக்காவின் தர் இஸ் சலாம் நகரம் உள்ளது.

மக்கள் தொகை அதிகரித்து வரும் டாப் 10 நகரங்களின் பட்டியலில் மும்பை இடம்பிடித்துள்ளது.  

Wednesday, December 5, 2018

உத்திரப்பிரதேசத்தின் பாதோஹி மாவட்டத்திற்கு சிறந்த ஏற்றுமதி குறியீடு

உத்திரப்பிரதேசத்தின் பாதோஹி மாவட்டத்திற்கு கம்பளம் மற்றும் இதர தரை விரிப்பான் பொருட்கள் பிரிவில் ‘சிறந்த ஏற்றுமதி’ குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகுதி நிலையானது வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளிநாட்டு வர்த்தகத்தின் பொது இயக்குநரகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

கங்கை ஆற்றின் அருகில் அமைந்துள்ள இந்த பாதோஹி நகரமானது இந்த குறியீட்டைப் பெற்ற 37-வது நகரமாகும்.  

2019 ஆண்டுக்கான 6-வது இந்திய திறன்கள் அறிக்கை

6-வது பதிப்பு மற்றும் 2019க்கான இந்திய திறன்கள் அறிக்கையின்படி அதிகபட்ச வேலைவாய்ப்பு திறன்களுடன், ஆந்திரப் பிரதேசமானது, முதலிடத்தைப் பிடித்துள்ளது.  அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புத் திறன்களுடன் அதிகப்படியாக வேலையளிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசமும் ஒன்றாகும். பெண்களின் வேலைவாய்ப்புத் திறன் 46% மற்றும் ஆண்களின் வேலைவாய்ப்புத் திறன் 48% ஆகியவற்றுடன் மொத்த வேலைவாய்ப்புத் திறன் 47% ஆக உயர்ந்துள்ளது.

50-வது நுரையீரல் ஆரோக்கியத்திற்கான ஐக்கிய உலக மாநாடு

4 நாள்களுக்கு நடைபெறும் நுரையீரல் ஆரோக்கியம் மீதான 50-வது ஒன்றிய சர்வதேச மாநாடானது, அடுத்த வருடம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று காசநோய் மற்றும் நுரையீரல் நோய்க்கு எதிரான சர்வதேச ஒன்றியமானது அறிவித்துள்ளது.

மாநாட்டின் கருத்துரு : “அவசர நிலையின் முடிவு : அறிவியல், தலைமைத்துவம், நடவடிக்கை” (Ending the Emergency: Science, Leadership, Action)

தமிழகத்தில் 181 என்ற, இலவச தொலைபேசி எண் அறிமுகம்

பெண்கள் சார்ந்த வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்தில், '181' என்ற, இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில், பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், 181 என்ற, இலவச தொலைபேசி எண்ணை, நான்காண்டுகளுக்கு முன், மத்திய அரசு அறிமுகம் செய்தது. 
சில வட மாநிலங்களில் மட்டுமே, இந்த சேவை செயல்பாட்டில் உள்ளது.
தற்போது, இந்த சேவை, தமிழகத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா மாநாடு

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா மாநாடு, போலந்தில் தொடங்கியது.

இது தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க, ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு முன்பு, பாரீசில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, 200 நாடுகளின் பிரதிநிதிகள் போலந்தில் உள்ள கடோவைஸ் நகரில் ஒன்று கூடியுள்ளனர். 

வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில், பருவநிலை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.