Friday, November 23, 2018

Nov 23 - உலக திறமையான நாடுகள் பட்டியல் – 2018

உலக திறமையான நாடுகள் பட்டியல் – 2018

உள்நாட்டு மக்களுக்கான தொழில்சார் பயிற்சிகள், கல்விமுறை மற்றும் மொழிதிறன் வளர்ப்பு போன்றவற்றில் அவர்களின் திறமைகளை வளர்க்க ஒரு நாடு எந்த அளவில் முதலீடு செய்திருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு, சுவிட்சர்லாந்தின் ஐ.எம்.டி பிசினஸ் ஸ்கூல் நடத்திய “உலக திறமையான நாடுகள் – 2018” உலகளாவிய ஆய்வில் இந்தியாவானது மொத்தம் 63 நாடுகளில் 53வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.

2017ம் ஆண்டில் இந்தியா 51வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Nov 22 - ஆப்பிரிக்க கண்டத்தின் முதலாவது அதிவேக இரயில் பாதை தொடக்கம்

ஆப்பிரிக்க கண்டத்தின் முதலாவது அதிவேக இரயில் பாதை தொடக்கம

ஆப்பிரிக்க கண்டத்தின் முதலாவது மற்றும் மொராக்கோவின் முதல் அதிவேக இரயில் பாதையானது டேன்ஜியரில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் மொராக்காவின் மன்னர் ஆறாம் முகம்மது ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்த இரயில்பாதைக்கு “அல் போராக்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிரஞ்ச் மொழியில் LGV என அறியப்படும். இந்த இரயில் பாதையானது டேன்ஜியர் மற்றும் கஸா பிளான்கா ஆகிய இரு நகரங்களின் பொருளாதார மையங்களை இணைக்கிறது.  

Nov 22 - வருவாய் துறையின் புதிய செயலாளராக அஐய் பூஷன் பாண்டே நியமனம்

வருவாய் துறையின் புதிய செயலாளராக அஐய் பூஷன் பாண்டே நியமனம்

நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது அஐய் பூஷன் பாண்டேவை வருவாய் துறையின் புதிய செயலாளராக நியமித்துள்ளது.

இவர் நவம்பர் 30-ம்தேதி முதல் பணி ஓய்வு பெறும் ஹஸ்முக் அதியாவுக்குப் பதிலாக நியமிக்கப்படுகிறார். தற்போது, அஐய் பூஷன் பாண்டே – UIDAI ன் CEO – ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nov 22 - இந்திய சமூகப் பணி மாநாடு (Indian Social Work Congress)

இந்தியாவில் சமூகப்பணி, கல்வி மற்றும் ஆராய்ச்சி பற்றிய விவகாரங்களை கலந்துரையாடுவதற்காக சமூக அளவில் சகோதரத்துவத்தைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட, இந்திய சமூகப் பணி மாநாடு-இன் (Indian Social Work Congress) ஆறாவது பதிப்பு புது டெல்லியில் நடைபெற்றது.

2018 –ஆம் ஆண்டு மாநாட்டின் கருத்துரு “மனித மேம்பாடு மற்றும் சமூக உள்ளடக்கம் சமூகப் பணிக்கான கல்வி மற்றும் நடைமுறைக்கு தவிர்க்க இயலாதவை” என்பதாகும். இந்த மாநாடு முதன்முதலில் 2013-ல் நடத்தப்பட்டது.

Nov 22 - இமயமலைப் பகுதியில் இமயமலைப் பகுதி பிராந்திய ஆணையம் (HRSC) தொடக்கம்

இமயமலைப் பகுதியில் இமயமலைப் பகுதி பிராந்திய ஆணையம் (HRSC) தொடக்கம்

இமயமலைப் பகுதியின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் பொருட்டு, நிதி ஆயோக்கானது இமயமலைப் பகுதி பிராந்திய ஆணையத்தை உருவாக்கியுள்ளது(HSRC – Himalayan State Regional Council). இந்த ஆணையமானது நிதி ஆயோக்கின் உறுப்பினரான டாக்டர் வி.கே. சரஸ்வத் தலைமையில் செயல்பட உள்ளது.

மேலும் ஜம்மு காஷ்மீர், உத்திரகாண்ட் மற்றும் இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களை உள்ளடக்கிய இமயமலைப் பகுதியின் நீடித்த வளர்ச்சிக்கான செயல்பாட்டு ஆணையமாக இந்த ஆணையம் செயல்படும்.

Thursday, November 22, 2018

Nov 21 - உலக கோப்பை அக்ரோபாடிக் ஜிம்னாஸ்டிக்ஸ் இந்தியா 2 பதக்கம்

உலக கோப்பை அக்ரோபாடிக் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆண்கள், பெண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்றது. அசர்பெய்ஜான் தலைநகர் பாகுவில் உலக கோப்பை அக்ரோபாடிக் ஜிம்னாஸ்டிக்ஸ் நடக்கிறது. 

ஆண்கள் பிரிவில் பிரின்ஸ், சித்தேஷ், ரிஷிகேஷ், ரெஜிலேஷ் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது.

மொத்தம் 20.560 புள்ளிகள் பெற்ற இவர்கள் மூன்றாவது இடத்துடன் வெண்கலம் வென்றனர். தங்கம், வெள்ளி முறையே ரஷ்ய அணி கைப்பற்றியது.

பெண்கள் பிரிவில் ஆயுஷி, பார்கி, பிராசி, வால்டே அடங்கிய இந்திய அணி 18.200 புள்ளிகள் பெற்று வெண்கலம் கைப்பற்றினர். 

ரஷ்ய அணி வீராங்கனைகள் தங்கத்தை வசப்படுத்தினர். பெலாரஸ் அணி வெள்ளி வென்றது.

Nov 21 - சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் வர்த்தக மாநாடு

இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் (ராய்) சார்பில், 8-வது சென்னை சில்லரை வர்த்தக மாநாடு சென்னையில் நடைபெற்றது.

தென்னிந்தியாவில் சில்லரை விற்பனையின் முக்கியத்துவம் குறித்து விவாதிப்பதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது .

இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன்  ஆவார்.