Tuesday, March 30, 2021

Thirukkural - திருக்குறள்

திருக்குறள் 

திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள்

1. பரிமேலழகர் (10-வது உரையாசிரியர்)
2. தருமர்
3. மணக்குடவர்(முதன் முதலில் உரை எழுதியவர்)
4. தாமத்தர்
5. பரிதி
6. திருமலையர்
7. மல்லர்
8. கவிப்பெருமாள்
9. காளிங்கர்
10.நச்சர்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812

திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Wednesday, August 19, 2020

Polity Previous Year Questions and Answers - Part 02 | TNPSC Group I, II, IV | PB Study Corner

Polity Previous Year Questions and Answers


Indian Polity Previous Year QA (01-20) - https://bit.ly/3fH0iGV



Indian Polity Previous Year QA (21-40) - https://bit.ly/2YfxQpK

Friday, August 14, 2020

Polity Previous Year Questions and Answers - Part 01 | TNPSC Group I, II, IV | PB Study Corner

Polity Previous Year Questions and Answers

Indian Polity Previous Year QA (01-20) - https://bit.ly/3fH0iGV



Indian Polity Previous Year QA (21-40) - https://bit.ly/2YfxQpK

Wednesday, August 5, 2020

இந்திய அரசியலமைப்பு ஒரு பார்வை

அரசியலமைப்பு  ஒரு பார்வை

அரசியலமைப்பு என்பது  ஒரு  நாட்டு  மக்களை  ஆட்சிபுரியும் அடிப்படையான அரசியல் முறையை கூறுவதாகும்.

அரசின் சட்டமியற்றும்  சபை, நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றை தோற்றுவித்து அவற்றின் அதிகாரிகளை வரையறுத்து, அவற்றுடன் மக்களுக்கும் உள்ள உறவுகளை நெறிப்படுத்துவதே அரசியலமைப்பு ஆகும்.

இந்திய அரசியலமைப்பு உலகிலேயே மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆகும்.

அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பொழுது 395 பிரிவுகள், 22 பகுதிகள், 12 அட்டவணைகள் இருந்தன.
தற்போது 465 பிரிவுகள், 25 பகுதிகள், 12 அட்டவணைகள் உள்ளன.

இந்திய அரசியலமைப்பு சட்டம் வளர்ச்சி
நமது அரசியல் அமைப்பின் பல்வேறு சிறப்பு இயல்புகள் ஆங்கிலேய ஆட்சியின் தாக்கத்தை கொண்டுள்ளது ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட காலனி ஆதிக்கச் சட்டங்கள் நமது அரசியலுக்கும் அரசியலமைப்புக்கும்  தூண்டுதலாக உள்ளன. 
1.வணிகக் குழுவின் கீழ் சட்ட வளர்ச்சி ஒழுங்குமுறைச் சட்டம்- (1773)