Sunday, November 25, 2018

இன்டர்போல் (Interpol) அமைப்பின் புதிய தலைவராக “சிம் ஜோங் யாங்” நியமனம்

இன்டர்போல் (Interpol) அமைப்பின் புதிய தலைவராக “சிம் ஜோங் யாங்” நியமனம்

சர்வதேச காவல் துறையான இன்டர்போல் (Interpol) அமைப்பின் புதிய தலைவராக, தென்கொரிய நாட்டைச் சேர்ந்த “சிம் ஜோங் யாங்” என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் துபாய் நகரில் நடைபெற்ற இன்டர்போல் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பு: சர்வதேச காவல் துறை (The International Criminal  Police Organization – INTERPOL) சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக செப்டம்பர் 7, 1923ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இதன் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் உள்ளது.

ஐரோப்பிய யூனியன் பிரிட்டன் இடையேயான வரைவு ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல்

ஐரோப்பிய யூனியன் பிரிட்டன் இடையேயான வரைவு ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு, இரு தரப்புக்கும் இடையே தொடர வேண்டிய உறவு தொடர்பான வரைவு ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973ம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.

குறிப்பு: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Friday, November 23, 2018

Nov 24 - நெல்லையில் 48 பள்ளிகளுக்கு தூய்மைக்கான விருது


நெல்லையில் 48 பள்ளிகளுக்கு தூய்மைக்கான விருதுகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

நெல்லையில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் சார்பில், சுகாதாரத்தின் முக்கிய அங்கங்களான சுகாதாரமான குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதி, சோப்புகளுடன் கூடிய கை கழுவும் வசதி, பராமரித்தல், நடத்தை மாற்றம் மற்றும் திறன் உயர்த்துதல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 48 பள்ளிகள் தூய்மைக்கான விருதுகளை பெருவகற்குமாக தேர்வு செய்யப்பட்டு, இந்த விருதினை கலெக்டர் ஷில்பா அவர்கள் வழங்கினார்.

Nov 24 - ஒரே ராக்கெட் மூலம் 5 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா

ஒரே ராக்கெட் மூலம் 5 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா

சீன நாடானது, விண்வெளி சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஷியான் – 6 என்னும் செயற்கைகோள் மற்றும் 4 சிறியவகை செயற்கைக் கோள்களை “லாங் மார்ச் – 2டி” என்ற ஒரே ராக்கெட் மூலம் வெற்றிகரமாக, விண்ணில் செலுத்தியது. மார்ச் – 2டி ராக்கெட் மூலம் அந்தச் செயற்கைக்கோள் கான்ஸீ மாகாணத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

Nov 24 - 2018 ஆம் ஆண்டிற்கான வார்த்தை "Toxic"- ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு

2018 ஆம் ஆண்டிற்கான வார்த்தை "Toxic"- ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு

2018 ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக ‘Toxic’’ எனும் அடைமொழிச் சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதி அறிவித்துள்ளது.

இந்த அடைமொழிச் சொல்லானது “நச்சுத்தன்மை” என்ற பொருளில் வரையறை செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த சொல்லின் அதிகபட்ச பயன்பாடானது அதன் தேர்ந்தெடுப்பிற்கு வழி வகுத்துள்ளது. 2017-ல் ‘Youthquake’ என்ற சொல்லும் 2016ல் ‘Post truth’ என்ற சொல்லும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.  

Nov 24 - பாலில் கலப்படத்தை கண்டுபிடிக்க ஸ்மார்ட்போனில் நவீன வசதி

பாலில் கலப்படம் இருந்தால் இனி ஸ்மார்ட்போன் மூலமாகவே கண்டுபிடிக்கும் வசதியை ஹைதராபாத் ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹாலோகுரோமட்டிக் என்று அழைக்கப்படும், நானோ அளவிலான இண்டிகேட்டர் காகிதத்தில் சிப் பொருத்தி சென்சார் செய்யும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள்.

சென்சார் உள்ள காகிதம் பாலில் தோய்க்கப்படும். அந்தக் காகிதத்தில் ஏற்படும் நிறமாற்றம் ஸ்மார்ட்போன் கேமராவில் படமாக் கப்பட்டு, அல்காரிதம் மூலம் அதன் pH அளவை எளிதில் காண முடியும். 

இதன்மூலம் பாலில் கலப் படம் உள்ளதா இல்லையா என் பதை எளிதில் காணலாம்.

Nov 24 - செல்வாக்கு மிகுந்த இந்தியர்கள் பட்டியல்

செல்வாக்கு மிகுந்த இந்தியர்கள் பட்டியல்

யுகவ் நிறுவனம் சார்பில் ‘இன்புளுயன்ஸர் இன்டக்ஸ் 2018’ என்ற தலைப்பில் மக்களைக் கவர்ந்த செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டது. 

கருத்துக்கணிப்பின் முடிவுகளை யுகவ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், மக்களின் விருப்பம், நம்பிக்கை, தனித்துவம், செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் முதல் 10 செல்வாக்கு மிகுந்த இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

இதில் முதலிடத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இடம் பெற்றுள்ளார்,

2-ம் இடத்தில் இந்தி நடிகை தீபிகா படுகோன் இடம் பெற்றார்.

3-வதுஇடத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும்,

4-வது இடத்தில் சச்சின் டெண்டுல்கரும்,

கோலி 6-வது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.

இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் 5-வது இடம் பிடித்துள்ளார்.

கிரிக்கெட் தவிர்த்து மற்ற விளையாட்டுகளில் மக்களைக் கவர்ந்தவர்கள் பட்டியலில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து 15-வது இடத்தில் உள்ளார்.