Saturday, December 1, 2018

உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் -1

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988-ல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.  

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயிட்ஸ்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம் முதல் இரண்டு வருடங்களில்,எய்ட்ஸ் தினத்திற்கான கருப்பொருள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரையே சுற்றி இருந்தது. எய்ட்சால் அவதியூருபவர்கள் மற்றும் ஹெட்ச்.ஐ.வியால் பாதிக்கப்படுபவர்கள் எல்லா வயதினருமே என்பதனால் இந்த கருப்பொருள்கள் பின்பு கடினமாக எதிர்க்கப்பட்டன.

2004-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரசாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது. ஒவ்வொரு வருடமும், போப்பரசர்கள் இரண்டாம் ஜான்பால் மற்றும் பதினாறாம் பெனெடிக்ட் உலக எய்ட்ஸ் தினத்தன்று நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவார்கள்

தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் (NSDC) தலைவர்

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் (NSDC) தலைவராக திரு ஏ எம் நாயக் (Anil Manibhai Naik) என்பவரை நியமித்துள்ளது.

இந்தியாவின் பெரும் பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக ஏ.எம் நாயக் உள்ளார்.

NSDC – National Skill Development Corporation  

சார்க் (SAARC)உச்சி மாநாடு- 2018

தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சார்க் உச்சி மாநாடு 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ளும்படி பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. கடைசியாக, 2014-இல் SAARC மாநாடு நேபாளத்தின் காத்மண்டு நகரில் நடந்தது.

குறிப்பு  சார்க் (SAARC- South Asian Association for Regional cooperation)  தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (SAARC), டிசம்பர் 8, 1985-இல் ஏற்படுத்தப்பட்டது.

தெற்காசியாவின் 8 நாடுகள் (இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, மாலத்தீவு, பூடான்) உறுப்பினர்களாக உள்ளன.

2007ல் ஆப்கானிஸ்தான் 8-வது உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு லோக் ஆயூக்தா விதிகள் – 2018

லோக்பால் மற்றும் லோக் ஆயூக்தா சட்டம் 2013-ன் 63-வது பிரிவுப்படி, ஒவ்வொரு மாநிலமும் மற்றும் யூனியன் பிரதேசமும் சட்டம் இயற்றி லோக் ஆயூக்தா நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்.
அதன்படி, தமிழக அரசானது, அரசியல் விதிகள், அதிகாரிகளின் ஊழல் புகார்களை விசாரிக்கும் “லோக் ஆயூக்தா” அமைப்பதற்கான பணியை தொடங்கியுள்ளது.

தமிழக அரசு சார்பில் “தமிழ்நாடு லோக் ஆயூக்தா விதிகள் – 2018” என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Wednesday, November 28, 2018

கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிக்கும் “சஷாக்ட் மகிளா” திட்டம்

மகளிர் குழுக்கள் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்கு இடையே ஒரு இடைமுகத்தை அளிப்பதன் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிக்க வழி செய்வதற்காக, “சஷாக்ட் மகிளா” என்னும் திட்டத்தை இமாச்சலப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் இமாச்சலப் பிரதேச அரசு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை பணமில்லா மருத்துவ சேவையை அளிக்கும் இமாச்சல் சுகாதார திட்டத்தை (Himachal Health Care Scheme – HIMCARE) செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டின் சர் ஹென்றி காட்டன் ரூக்கியை வென்ற முதலாவது இந்தியர்

2018 ஆம் ஆண்டின் சர் ஹென்றி காட்டன் ரூக்கியை வென்ற முதலாவது இந்தியர்

துபாயில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான டிபி உலக சாம்பியன்ஷிப் போட்டியில், சர் ஹென்றி காட்டன் ரூக்கியை வென்ற, முதலாவது இந்தியராக சண்டிகரைச் சேர்ந்த, இளம் இந்திய குழிப் பந்தாட்டக்காரரான, சுபன்கர் சர்மா உருவெடுத்துள்ளார்.

ஐரோப்பாவில் நடைபெற்ற போட்டியில் இந்த விருதை வென்ற முதலாவது இந்தியர் இவராவார்.

ஆசியாவில் நடைபெற்ற போட்டிகளில் ஆண்டின் ரூக்கி விருதை அர்ஜுன் அட்வால் (1995), சிவ் கபூர் (2005) மற்றும் சி. முனியப்பன் (2009) ஆகியோர் வென்று உள்ளனர்.  

விங்சூட் முறையில் விமானத்தில் இருந்து குதித்து பெண் சாதனை

உலகிலேயே முதன்முறையாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த, ஹீதர் ஸ்வான் (Heather Swan) என்ற பெண் விங்சூட் முறையில், வானிலிருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.  

விமானம் மூலம் 12 ஆயிரம் அடி உயரத்திற்கு சென்ற அவர் தனது கணவருடன் விமானத்தில் இருந்து குதித்தார். அப்போது அவர் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தார்.

இதன் மூலம் விங்சூட் முறையில் முதலில் பறந்த பெண் என்ற பெருமையை ஸ்வான் பெற்றுள்ளார்.