தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சார்க் உச்சி மாநாடு 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ளும்படி பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. கடைசியாக, 2014-இல் SAARC மாநாடு நேபாளத்தின் காத்மண்டு நகரில் நடந்தது.
குறிப்பு சார்க் (SAARC- South Asian Association for Regional cooperation) தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (SAARC), டிசம்பர் 8, 1985-இல் ஏற்படுத்தப்பட்டது.
தெற்காசியாவின் 8 நாடுகள் (இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, மாலத்தீவு, பூடான்) உறுப்பினர்களாக உள்ளன.
2007ல் ஆப்கானிஸ்தான் 8-வது உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment