Monday, December 3, 2018

தென் ஆசிய பிராந்திய இளைஞர் சமாதான மாநாடு

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷண் சமிதி போன்ற அமைப்புகள் யுனெஸ்கோவுடன் (UNESCO) இணைந்து, 3 நாள் “தென் ஆசிய பிராந்திய இளைஞர் சமாதான மாநாட்டை (South Asia Regional Youth Peace Conference) “புதுடெல்லியில்” நடத்த உள்ளது.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் தொடக்கத்தை குறிக்க இந்த மாநாடு நடத்த உள்ளது.  

சௌபாக்யா – பிரதான் மந்திரி சகஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட “சௌபாக்யா – பிரதான் மந்திரி சகஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ், நாட்டில் மத்திய பிரதேசம், திரிபுரா, பீகார், ஜம்மு & காஷ்மீர், மிசோரம், சிக்கிம், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்கள் 100 சதவிகிதம் மின்சார இணைப்பை பெற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறிப்பு சௌபாக்கிய திட்டம் என்பது நாட்டின் அனைத்து இடங்களிலும் மார்ச் – 2019 ஆம் ஆண்டிற்குள் மின்சார இணைப்பை வழங்குவதற்கான திட்டம் ஆகும்.

நாகலாந்தில் 19-வது “ஹாரன்பில்” திருவிழா

நாகலாந்தின் வளமான கலாச்சாரம் மற்றும் கைத்தொழில்கள், விளையாட்டுகள், உணவு வகைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கான, 19-வது “ஹாரன்பில்” திருவிழா நாகலாந்து மாநில தலைவர் ஹோகிமா அருகில் உள்ள கிஸ்மா கிராமத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்துள்ளார்.

இத்திருவிழாவில் கௌரவ விருந்தாளியாக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் “கென்னத் ஜஸ்டர்” அழைக்கப்பட்டுள்ளார்.

Sunday, December 2, 2018

உலகின் முதலாவது நிலத்தடி நீர்மட்டத்திற்கு கீழ் அமைந்த ஆடம்பர தங்கும் விடுதி

*உலகின் முதலாவது நிலத்தடி நீர்மட்டத்திற்கு கீழ் அமைந்த ஆடம்பர தங்கும் விடுதி*
உலகின் முதலாவது நிலத்தடி நீர்மட்டத்திற்கு கீழ் அமைந்த ஆடம்பர தங்கும் விடுதியான இண்டர்கான்டினென்டல் ஷாங்காய் வொண்டர்லேண்ட் விடுதியானது சீனாவின் ஷாங்காய் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் சாங்கியாங் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.

UNICEF -ஆனது குழந்தைகளின் உரிமைகளுக்காக போராட அசாம் பிரபல பாடகியை நியமனம் செய்துள்ளது

*UNICEF -ஆனது குழந்தைகளின் உரிமைகளுக்காக போராட அசாம் பிரபல பாடகியை நியமனம் செய்துள்ளது*
ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகளுக்கான அவசர நிதியமானது (UNICEF – United Nations International Children’s Emergency Fund) குழந்தைகளின் உரிமைகளுக்காக போராட வடகிழக்குப் பிராந்தியத்திற்காக முதல் இளைஞர் பரப்புனராக அசாம் பிரபல பாடகியான நஹீத் அப்ரின் என்பவரை நியமித்துள்ளது.

தீனதயாள் அந்த்யோதயா திட்டத்திற்காக பைசா என்ற மின்னணு தளம் தொடக்கம்

தீனதயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் (DAY – NULM/Deendayal Antyodaya Yojana. National Urban Livelihoods Mission) கடன்களை விரைவாக செயலாக்கம் செய்வதற்காக, வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகமானது, மலிவான கடன் வசதி மற்றும் வட்டி உதவித் தொகை அணுகலுக்காக (PAiSA) பைசா என்ற மின்னணு தளத்தை புது டெல்லியில் நடைபெற்ற மாநகராட்சி நிதி மற்றும் நகர்புற திட்டமிடல் மீதான தேசிய பட்டறையின் போது தொடங்கப்பட்டது.

PAiSA – Portal for Affordable Credit and Interest Subvention Access

நேரடி வரிச் சட்டத்தை வரைவு செய்யும் பணிக்குழுவின் தலைவராக அகிலேஷ் ரஞ்சன் நியமனம்

மத்திய நேரடி வரிகளுக்கான ஆணையத்தின் உறுப்பினரான அகிலேஷ் ரஞ்சனை புதிய நேரடி வரிச் சட்டத்தை வரைவு செய்யும் பணிக்குழுவின் தலைவராக மத்திய அமைச்சகம் நியமித்துள்ளது.
இவர் அரவிந்த் மோடிக்கும் பதிலாக பதவியேற்க உள்ளார்.

இப்பணிக் குழுவானது, 1961-ன் வருமான வரிச் சட்டத்தை, மதிப்பாய்வு செய்யும் நாட்டின் பொருளாதார தேவைகளுடன் ஒத்திசையக் கூடிய புதிய நேர்முக வரிச் சட்டத்தை வரைவு செய்வதற்காக நவம்பர் 2017ல் அமைக்கப்பட்டது.