Wednesday, December 5, 2018

50-வது நுரையீரல் ஆரோக்கியத்திற்கான ஐக்கிய உலக மாநாடு

4 நாள்களுக்கு நடைபெறும் நுரையீரல் ஆரோக்கியம் மீதான 50-வது ஒன்றிய சர்வதேச மாநாடானது, அடுத்த வருடம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று காசநோய் மற்றும் நுரையீரல் நோய்க்கு எதிரான சர்வதேச ஒன்றியமானது அறிவித்துள்ளது.

மாநாட்டின் கருத்துரு : “அவசர நிலையின் முடிவு : அறிவியல், தலைமைத்துவம், நடவடிக்கை” (Ending the Emergency: Science, Leadership, Action)

தமிழகத்தில் 181 என்ற, இலவச தொலைபேசி எண் அறிமுகம்

பெண்கள் சார்ந்த வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்தில், '181' என்ற, இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில், பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், 181 என்ற, இலவச தொலைபேசி எண்ணை, நான்காண்டுகளுக்கு முன், மத்திய அரசு அறிமுகம் செய்தது. 
சில வட மாநிலங்களில் மட்டுமே, இந்த சேவை செயல்பாட்டில் உள்ளது.
தற்போது, இந்த சேவை, தமிழகத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா மாநாடு

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா மாநாடு, போலந்தில் தொடங்கியது.

இது தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க, ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு முன்பு, பாரீசில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, 200 நாடுகளின் பிரதிநிதிகள் போலந்தில் உள்ள கடோவைஸ் நகரில் ஒன்று கூடியுள்ளனர். 

வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில், பருவநிலை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

தேசிய ஜூனியர் தடகளம் தமிழகம் 2வது இடம்

தேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக அணி 4 தங்கம் உட்பட 14 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது.  வெங்கடேஸ்வரா பல்கலை.

தாரகராமா விளையாட்டு மைதானத்தில் நடந்த இத்தொடரில், 309 வீரர், வீராங்கனைகள் அடங்கிய தமிழக அணி களமிறங்கியது.

மத்தியப்பிரதேச அணி  7 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலத்துடன் முதலிடம் பிடித்தது.  தமிழகம் 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 2வது இடம் பெற்றது. 

3 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலத்துடன் உத்தரபிரதேசம் 3வது இடமும், 2 தங்கம், 1 வெண்கலத்துடன் ஆந்திரா 8வது இடமும் பிடித்தன. 

Monday, December 3, 2018

முதல் முறையாக 2022-ம் ஆண்டு இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாடு - பிரதமர் மோடி அறிவிப்பு

ஜி-20 உச்சி மாநாடு முதல் முறையாக இந்தியாவில் 2022-ம் ஆண்டு நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

உலக அளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் முதல் 20 நாடுகள் இணைந்து ‘ஜி-20’ என்ற பெயரில் கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன.

இந்தியாவும் அங்கம் வகிக்கும் இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் ஏதாவது ஒரு உறுப்பு நாட்டில் நடந்து வருகிறது.

உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 90 சதவீதத்தையும், 80 சதவீத வர்த்தகத்தையும் கொண்டிருக்கும் இந்த நாடுகள், உலக மக்கள் தொகையில் 3-ல் இரண்டு பங்கையும், ஒட்டுமொத்த நிலப்பரப்பில் சுமார் பாதியளவையும் கொண்டிருக்கின்றன. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை இந்தியா இதுவரை நடத்தியது இல்லை. ஆனால் 2022-ம் ஆண்டு நடைபெறும் மாநாட்டை இந்தியா நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டில், இந்த மாநாட்டை நடத்துவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற 13-வது ஜி-20 மாநாட்டின் இறுதி நிகழ்வில் பேசும்போது, பிரதமர் மோடி இந்த தகவலை வெளியிட்டார். இந்த வாய்ப்பை விட்டு கொடுத்ததற்காக இத்தாலிக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.  

இந்தியாவில் இணைய தள வேகத்தை அதிகரிக்க GSAT 11 செயற்கைகோள்

இந்தியாவில் இணைய தள வேகத்தை அதிகரிக்கக் கூடியதும், இதுவரை இல்லாத அதிக எடை கொண்டதுமான செயற்கைக்கோளை இஸ்ரோ நாளை மறுநாள் விண்ணில் செலுத்தவுள்ளது.

பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 5.9 டன் எடை கொண்ட GSAT 11 என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

தேசிய சீனியர் மல்யுத்தம்: வினேஷ், சாக்ஷிக்கு தங்கம்


தேசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் ஆகியோர் தங்கம் வென்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் டாடா மோட்டார்ஸ் தேசிய சீனியர் சாம்பியன் ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.

62 கிலோ எடைப்பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் 11-0 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியாணாவின் பூனாவை வீழ்த்தி தங்கம் வென்றார். 

65 கிலோ பிரிவில் அனிதா 4-0 என்ற புள்ளிக்கணக்கில் கீதிகா ஜாக்கரை வென்று தங்கம் வென்றார். இதில் ரித்து மாலிக் வெண்கலம் வென்றார்.