12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்தில், பெண்ணை வடகரை மேற்கோவலூர் நாட்டு இலச்சியமுடையான் உழியன் மாதன் என்பவர் சோழாந்தகப் பல்லவராயன் வடுகன் ஆளவந்தான் நினைவாக, அமைக்கப்பட்ட தூம்பானது, திருவண்ணாமலை அருகே தென்முடியனூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Sunday, December 2, 2018
இந்தியா-அமெரிக்கா விமானப்படைகள் நாளை (03.12.2018) முதல் 12 நாள் கூட்டுப் பயிற்சி
அமெரிக்காவின் முதன்மையான ராணுவ கூட்டாளியாக இந்தியாவை கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் நாளை முதல் 12 நாட்களுக்குமேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள காலய்குன்டா மற்றும் பனாகர் விமானப்படைத் தளங்களில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
இருநாடுகளுக்கு இடையில் நான்காவது முறையாக நடைபெறும் இந்த பயிற்சிக்காக அமெரிக்காவில் இருந்து F15 C/D and C-130 ரகப்போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன.
இந்தியாவின் சார்பில் Su-30 MKI, Jaguar, Mirage 2000, C-130J உள்ளிட்ட போர் விமானங்கள் பங்கேற்கும் இந்த கூட்டுப்போர் பயிற்சிக்கு எக்ஸ் கோப் இந்தியா (Ex Cope India-18) என பெயரிடப்பட்டுள்ளது.
Saturday, December 1, 2018
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி
தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகள் மானு பாக்கர், ஹீனா சித்து ஆகியோரை பின்னுக்கு தள்ளி, 13 வயது இஷா சிங் மூன்று தங்கம் வென்றுள்ளார்.
திருவனந்தபுரத்தில் 62-ஆவது தேசிய துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன
இந்த போட்டியில் 10 மீ ஏர்பிஸ்டல் பிரிவு மகளிர், யூத் மகளிர், ஜூனியர் மகளிர் போட்டிகளில் தெலங்கானாவைச் சேர்ந்த, இளம் வீராங்கனை இஷா சிங் முறையே ஹீனா சித்து, மானு பாக்கர், ஸ்வேதா சிங் ஆகியோரை வென்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் -1
உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988-ல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயிட்ஸ்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம் முதல் இரண்டு வருடங்களில்,எய்ட்ஸ் தினத்திற்கான கருப்பொருள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரையே சுற்றி இருந்தது. எய்ட்சால் அவதியூருபவர்கள் மற்றும் ஹெட்ச்.ஐ.வியால் பாதிக்கப்படுபவர்கள் எல்லா வயதினருமே என்பதனால் இந்த கருப்பொருள்கள் பின்பு கடினமாக எதிர்க்கப்பட்டன.
2004-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரசாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது. ஒவ்வொரு வருடமும், போப்பரசர்கள் இரண்டாம் ஜான்பால் மற்றும் பதினாறாம் பெனெடிக்ட் உலக எய்ட்ஸ் தினத்தன்று நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவார்கள்
தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் (NSDC) தலைவர்
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் (NSDC) தலைவராக திரு ஏ எம் நாயக் (Anil Manibhai Naik) என்பவரை நியமித்துள்ளது.
இந்தியாவின் பெரும் பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக ஏ.எம் நாயக் உள்ளார்.
NSDC – National Skill Development Corporation
சார்க் (SAARC)உச்சி மாநாடு- 2018
தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சார்க் உச்சி மாநாடு 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ளும்படி பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. கடைசியாக, 2014-இல் SAARC மாநாடு நேபாளத்தின் காத்மண்டு நகரில் நடந்தது.
குறிப்பு சார்க் (SAARC- South Asian Association for Regional cooperation) தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (SAARC), டிசம்பர் 8, 1985-இல் ஏற்படுத்தப்பட்டது.
தெற்காசியாவின் 8 நாடுகள் (இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, மாலத்தீவு, பூடான்) உறுப்பினர்களாக உள்ளன.
2007ல் ஆப்கானிஸ்தான் 8-வது உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு லோக் ஆயூக்தா விதிகள் – 2018
லோக்பால் மற்றும் லோக் ஆயூக்தா சட்டம் 2013-ன் 63-வது பிரிவுப்படி, ஒவ்வொரு மாநிலமும் மற்றும் யூனியன் பிரதேசமும் சட்டம் இயற்றி லோக் ஆயூக்தா நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்.
அதன்படி, தமிழக அரசானது, அரசியல் விதிகள், அதிகாரிகளின் ஊழல் புகார்களை விசாரிக்கும் “லோக் ஆயூக்தா” அமைப்பதற்கான பணியை தொடங்கியுள்ளது.
தமிழக அரசு சார்பில் “தமிழ்நாடு லோக் ஆயூக்தா விதிகள் – 2018” என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
இந்திய அரசியலமைப்பின் முகவுரை முகவுரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும். முகவுரை அரசியலமைப்பின் த...
-
IBSF சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி பட்டம் வென்றுள்ளார் சாம்பியன்ஷிப் போட்டியில் 150 – UP பிரிவில் இந்திய வீரரான பங்...
-
பெலராஸ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார் வெண்கலம் வென்றார். பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் இந்தப் போட்டிகள் ந...