Wednesday, November 28, 2018

உதய் திட்டத்தின் மூலம் இந்திய விவசாயிகளுக்குத் திறன் பயிற்சி

இந்தியாவைச் சேர்ந்த இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு 2020ஆம் ஆண்டுக்குள் பயிற்சியளிக்கவுள்ளதாக, ஆஸ்திரேலிய நிறுவனமான, மூஃபார்ம் தெரிவித்துள்ளது.

உதய் திட்டத்தின் மூலம் இந்திய விவசாயிகளுக்குக் கால்நடைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு போன்ற தளங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளிக்கவிருக்கிறது மூஃபார்ம் நிறுவனம். 

இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியன் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூஃபார்ம் நிறுவனர், பரம் சிங் இந்தப் பயிற்சி திட்டத்தை அறிவித்தார்.

அவர் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது” என்றார்.  

No comments:

Post a Comment