முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு 2017ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதிக்கான விருது வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் அமைதி விருது கடந்த 1986-இல் உருவாக்கப்பட்டது.
ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான நவம்பர் 19-ஆம் தேதி இவ்விருது வழங்கப்படுகிறது.
அமைதிக்கான பணிகளுக்காக உழைக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், மனிதநேய நோக்கத்துடன் பொதுச் சேவையாற்றுபவர்கள் ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருதுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான சர்வதேச நடுவர் குழுவானது ஒருமனதாகக் தேர்வு செய்துள்ளது.
No comments:
Post a Comment