குஷான் அரச வம்சம் காலத்தில் பயன்படுத்தப்பட்ட, செம்பு நாணயங்கள் கண்டெடுப்பு.
உத்தர பிரதேசத்தில், 1,800 ஆண்டுகள் பழமையான செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, அந்த பகுதியில் தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர்.
கப்ரானா கிராமத்தில் உள்ள மலைப் பகுதியில், குஷான் அரச வம்சத்தைச் சேர்ந்த, மன்னர் வசுதேவர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட, செம்பு நாணயங்கள் கிடைத்தன. தலா, 8 கிராம் எடையுள்ள, பல சித்திரங்களுடன், இந்த நாணயங்கள் இருந்தன. இந்த நாணயங்கள், 1,800 ஆண்டுகள் பழமையானவை என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment